<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/category/இந்தியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 27 May 2026 10:39:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/category/இந்தியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</title>
		<link>https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:37:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[New report sees major upside in India-Sri Lanka land bridge proposal]]></category>
		<category><![CDATA[இந்தியா - இலங்கை தரைப்பாலம்]]></category>
		<category><![CDATA[ராமர் பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49410</guid>

					<description><![CDATA[<p>&#8211;  தர்மராஜா ரஸ்மிலா &#160; ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் &#8216;இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலத் திட்டம்&#8217;, இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது எனப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் &#8216;மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்&#8217; அண்மையில் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள நீண்டகால வர்த்தக நன்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. &#8216;இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்&#8217; என்ற தலைப்பில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/">இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211;  தர்மராஜா ரஸ்மிலா</p>
<p>&nbsp;</p>
<p>ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் &#8216;இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலத் திட்டம்&#8217;, இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது எனப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p>
<p>கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் &#8216;மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்&#8217; அண்மையில் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள நீண்டகால வர்த்தக நன்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>&#8216;இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்&#8217; என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த உத்தியோகபூர்வ ஆய்வில், இரு நாடுகளுக்கும் இடையே அமையவுள்ள நேரடிச் சாலைத் தொடர்பானது இருதரப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p><strong>முரண்பாடுகளும் சாத்தியக்கூறுகளும்</strong></p>
<p>அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நிலப்பரப்புத் தொடர்பை விவரித்திருந்தார்.</p>
<p>இவ்வளவு அருகாமையில் இருந்தும் நேரடித் தரைவழித் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு வரலாற்று முரண்பாடு என்றும், இத்திட்டத்தின் பின்னாலுள்ள பொறியியல் மற்றும் வணிகக் காரணங்கள் மிகவும் வலுவானவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த உரைக்கு பின்னரே, இந்த விவகாரம் மீண்டும் இரு நாட்டு ஊடகங்களிலும் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.</p>
<p><strong>9 மணித்தியாலங்களாகச் சுருங்கும் போக்குவரத்து</strong></p>
<p>தற்போதைய திட்டமிடலின்படி, இந்தியாவின் தனுஷ்கோடியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அதிவேகச் சாலை மற்றும் தொடருந்துப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்துத் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>தற்போதுள்ள கடல்வழிச் சுங்க நடைமுறைகள் மற்றும் துறைமுக நெரிசல்கள் காரணமாக, கப்பல் மூலம் சரக்குகளைக் கொண்டு சேர்க்கக் குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சமாக 122 மணித்தியாலங்கள் வரை எடுக்கிறது. ஆனால், இப்புதிய தரைப்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இதே சரக்குப் போக்குவரத்தை வெறும் 9 மணித்தியாலங்களுக்குள் மிக எளிதாக நிறைவு செய்துவிட முடியும் எனப் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>விழிஞ்சம் துறைமுகப் போட்டியும் கொழும்புத் துறைமுகத்தின் எதிர்காலமும்</strong></p>
<p>இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம், சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் கொழும்புத் துறைமுகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இத்தகைய பிராந்தியப் போட்டிகளுக்கு மத்தியில், இந்தத் தரைப்பாலம் கொழும்புத் துறைமுகத்தின் வர்த்தக எல்லையைத் தென்னிந்தியா வரை விரிவாக்கம் செய்யும். இதனால் கொழும்புத் துறைமுகத்தின் சர்வதேசப் போட்டித்திறன் மேலும் பலமடங்கு உயரும்.</p>
<p><strong>மாகாணப் பொருளாதார எழுச்சியும் சூழலியல் எச்சரிக்கையும்</strong></p>
<p>இந்த நேரடித் தரைவழி இணைப்பானது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றியமைக்கக் கூடியது. குறிப்பாக, வரும் 2034ஆம் ஆண்டளவில் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக அசுர வளர்ச்சி காணவுள்ள தென்னிந்தியாவின் (குறிப்பாக தமிழ்நாட்டின்) சந்தையுடன், இலங்கையின் பின்தங்கிய மாகாணங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்.</p>
<p>குறைந்த செலவிலான இந்தத் தரைவழி அணுகுமுறை, தென்னிந்தியப் பயணிகளை இலங்கை நோக்கி அதிகளவில் ஈர்க்கும் என்பதால், உள்ளூர் மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p>
<p>இருப்பினும், இத்திட்டத்தின் சாதகங்களை விவரித்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. பாக்கு நீரிணை மற்றும் ராமர் பாலம் (ஆதாம் பாலம்) அமைந்துள்ள கடல் பகுதி, அரிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைக் கொண்ட அதீத உணர்திறன் மிக்க மண்டலமாகும். எனவே, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, சர்வதேசத் தரத்திலான விரிவான சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படுவது கட்டாயமாகும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/">இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</title>
		<link>https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 10:51:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chief Minister Vijay wins trust vote]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49369</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5இன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/">நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர்.</p>
<p>இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார்.</p>
<p>இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5இன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p>
<p>இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.</p>
<p>இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஜ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p>
<p>எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.</p>
<p>இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p>
<p>நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது என்ன?- புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்புக்காக சட்டப்​பேர​வை இன்று (13) காலை 9.30 மணியளவில் கூடியது.</p>
<p>அவை கூடியதும், தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்பின்னர், பேரவையில் விவாதம் தொடங்கியது.</p>
<p>தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் – கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் தவெக அரசுக்கு ஆதரவை அறிவித்தார். அவர் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.</p>
<p>அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.</p>
<p>பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.</p>
<p>தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தவெக-வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை சிபிஎம் ஆதரிக்கிறது. இந்த அரசு மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தமிழக சட்டமன்றத்தின் மான்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.</p>
<p>விசிக எம்எல்ஏ வன்னியரசு பேசுகையில், “தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தும் என நான் நம்புகிறேன். முன்கூட்டியே அதற்கு வாழ்த்துகிறேன். பாஜகவின் செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் வகையில் தவெகவுக்கு விசிக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக செயல்பட வேண்டும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம். மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற முந்தைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.</p>
<p>ஐயூஎம்எல்ஏ எம்எல்ஏ ஷாஜஹான் பேசுகையில், “மக்களின் மௌனப் புரட்சி இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று ஆச்சர்யம் தான். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடலை வரவேற்கிறோம். மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தது வாழ்த்துகளுக்கு உரியது” என்றார்.</p>
<p>அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், “முதல்வர் விஜய்யை ஆளுமை மிக்கவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். அதனாலேயே திருச்சியில் 400 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். தவெகவுக்கு நேற்றும், இன்றும், நாளையும் எனது ஆதரவு உண்டு,” என்றார்.</p>
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேசுகையில், ”குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் பாஜக கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளோம். ஒன்றிய அரசு மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. அதற்கு எதிராக முதல்வர் விஜய் துணிவோடு செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.</p>
<p>பிரேமலதா கண்டனம்:</p>
<p>தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசுகையில், “எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பை கடைப்பிடித்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். முதலில் 717 மதுக்கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது.</p>
<p>அதேவேளையில், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத குதிரை பேரம் நடந்ததாக வரும் தகவல்களால் நான் மனவேதனை அடைகிறேன். ஜோதிடர் ராதன் பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததை தமிழக மக்கள் சார்பாக கண்டிக்கிறேன். இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பதை நீங்கள் (விஜய்) தெளிவுபடுத்த வேண்டும். இந்த அரசு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.” என்றார்.</p>
<p>இன்று ஒற்றைத் தாமரைதான்…</p>
<p>பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “நம்பிக்கை தீர்மானத்தில் எம் எல் ஏக்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் போல் பேசிவிட்டார்கள். நான் ஒற்றைத் தாமரை என்றார்கள். நாடாளுமன்றத்தில் 2 பாஜக உறுப்பினர்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தனர். இன்று மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது,” என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக நடுநிலை காத்தது.</p>
<p>வாக்கெடுப்பில் விலகி நின்ற பாமக:</p>
<p>பாமக எம் எல் ஏ சவுமியா அன்புமணி பேசுகையில், “சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பதே பாமகவின் கொள்கை. போதையில்லா தமிழ்நாடு என்பது பாமகவின் நிலைப்பாடு. பாமக கொள்கைகள் தமிழக நலனை முன்னிறுத்துவது ஆகும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும். விகித்தாச்சார பிரதிநித்துவத்தை ஏற்படுத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் 80% தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்டவை பாமகவின் நோக்கங்கள். தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாமக கொள்கைகளை ஒத்துப்போகும் வாக்குறுதிகள் இருந்தன. தமிழக முன்னேற்றத்திலும், நலனிலும் அக்கறை கொண்டு பாமக வாக்களிப்பதிலிருந்து விலகி நிற்கிறது,” என்றார். பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.</p>
<p>தவெக அரசுக்கு அதிமுக ஆதரவில்லை: இபிஎஸ்</p>
<p>இபிஎஸ் – தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 47 பேர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுள்ளனர். தவெக அரசுக்கு 65% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.</p>
<p>அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க நீட் தேர்வை எதிர்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது. மேலும், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.</p>
<p>அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது. இதனை தூய சக்தி என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் ஏற்கக் கூடாது,” என்று பழனிசாமி கூறினார்.</p>
<p>திமுக வெளிநடப்பு:</p>
<p>நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கண்டித்தார். மேலும், திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.</p>
<p>முன்னதாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் ​(தவெக) 108 தொகு​தி​களில் வெற்​றி பெற்​றது. தனிப் பெரும்பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் காங்கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய திமுக கூட்டணி கட்​சிகளிடம் விஜய் ஆதரவு கோரி​னார். அதில் 5 எம்எல்ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், திமுக கூட்​ட​ணியை முறித்து கொண்டு தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது.</p>
<p>மேலும் தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​ப​தாக தலா 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆகிய கட்​சிகள் அறிவித்தன. இதன்​மூலம் தவெக​வின் பலம் 120-ஆக உயர்ந்​தது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை எண்​ணிக்கை கிடைத்​த​தால் கடந்த 10-ம் திகதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்​சர்​களும் பதவி ஏற்​றனர்.</p>
<p>அதைத் தொடர்ந்து சட்​டப்​பேரவை தற்​காலிக தலை​வ​ராக கருப்பையா நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் உட்பட 233 எம்​எல்​ஏக்​கள் பதவியேற்​றுக் கொண்​டனர்.</p>
<p>இந்​நிலை​யில், புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு தனது பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் திகதிக்குள் ​(இன்று) நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகர் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்தார்.</p>
<p>அதன்​படி தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் இன்று கொண்டு வரப்​பட்டு வாக்​கெடுப்பு நடை​பெற்றது. இதில் தவெக அரசு பெரும்பான்மையை நிறைவேற்றியது.</p>
<p>The post <a href="https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/">நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’  &#8211; தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்</title>
		<link>https://oruvan.com/i-am-c-joseph-vijay-vijay-sworn-in-as-tamil-nadu-chief-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 10 May 2026 04:59:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பதவியேற்றார்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<category><![CDATA[ஜோசப்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49333</guid>

					<description><![CDATA[<p>தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் சற்று முன்னர் பதவியேற்றார் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-am-c-joseph-vijay-vijay-sworn-in-as-tamil-nadu-chief-minister/">‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’  &#8211; தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் சற்று முன்னர் பதவியேற்றார்</p>
<p>சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.</p>
<p>வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது.</p>
<p>பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.</p>
<p>இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.<br />
அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.</p>
<p>‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என விஜய் உறுதிமொழியளிக்க ஆரம்பித்ததும் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் எழுச்சியுடன் குரலெழுப்பினர்.</p>
<p>இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர்,தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>
<p>சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன. விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது</p>
<p>The post <a href="https://oruvan.com/i-am-c-joseph-vijay-vijay-sworn-in-as-tamil-nadu-chief-minister/">‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’  &#8211; தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 04 May 2026 05:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49295</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பலரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50 இற்கு மேற்பட்ட இடங்களிலும் உள்ளன. Axis My India கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதேவேளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/">தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பலரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.</p>
<p>அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50 இற்கு மேற்பட்ட இடங்களிலும் உள்ளன. Axis My India கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.</p>
<p>இதேவேளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.</p>
<p>எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.</p>
<p>இதனிடையே, சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/">தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</title>
		<link>https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 02 May 2026 12:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கருத்து கணிப்புகள்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[முடிவுகள்]]></category>
		<category><![CDATA[மே 04]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49286</guid>

					<description><![CDATA[<p>வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக திமுக &#8211; அதிமுக என்ற இரு துருவ  அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில், இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது. தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள், மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/">தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p>
<p>தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக திமுக &#8211; அதிமுக என்ற இரு துருவ  அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில், இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது.</p>
<p>தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள், மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன.  குறிப்பாக இளைஞர்கள், முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றோர் மற்றும் மாற்றத்தை விரும்பும்  மக்களிடையே தவெக மீது கணிசமான ஆர்வம் காணப்பட்டது.</p>
<p>ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அந்த வரவேற்பை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. பல கணிப்புகள் தவெக 10 முதல் 40 தொகுதிகள் வரையிலேயே வெற்றி பெறும் நிலையைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, INDIA TODAY &#8211; AXIS MY INDIA கருத்துக் கணிப்பு மாத்திரம் விஜயின் கட்சி 98  முதல் 120 இடங்கள் கைப்பற்றி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளது.</p>
<p>இந்த முரண்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. “பிரசாரங்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் உண்மையாகவே வாக்குகளாக மாறியதா? ” “மேடைகளில் தெரிந்த ஆதரவு வாக்குச் சாவடிகளில் தொடர்ந்ததா? ” அல்லது  “அமைதியாகத் தீர்மானிக்கப்பட்ட வாக்காளர்களின் மனநிலையை சில கருத்துக் கணிப்புகள் சரியாகப் பதிவு செய்யத் தவறிவிட்டதா?” என்ற சந்தேகங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன.</p>
<p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 234  தொகுதிகளுக்கும் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 84.69% வாக்குகள் இம்முறை பதிவாகின.</p>
<p>இவ்வாறிருக்க தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் NDTV- PEOPLE&#8217;S PULSE திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80  தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளையும் ஏனையவை 2 முதல் 6  இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேபோன்று, திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என REPUBLIC TV P MARQ கணித்துள்ளது.  அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும், மற்றயவை 1 முதல் 6 இடங்களை பெறும் எனவும் கணித்துள்ளது.</p>
<p>MATRIZE நடத்தியக் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் தவெக 10 முதல் 12 தொகுதிகளிலும், மற்றயவை 1 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என Times Now JVC கணித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளிலும்,  திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தவெக 8 முதல் 15 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>PEOPLE&#8217;S INSIGHT வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளிலும், தவெக 30 முதல் 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்றயவை அதிகபட்சம் 4 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், INDIA TODAY AXIS MY INDIA கருத்துக் கணிப்பில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி  தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.</p>
<p>திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணித்துள்ளது. அதேநேரம் திமுக மற்றும் தவெக ஒருசேர 35 சதவீத வாக்குகளைப் பெறும் என AXIS MY INDIA கணித்துள்ளது. Chanakya Strategies கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்களையும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளையும்  கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  தவெக 13 முதல் 18 இடங்களிலும், மற்றயவை 5 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.</p>
<p>அக்னி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும்  தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  VOTE VIBE நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 124 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளும், தவெக 10 தொகுதிகளும் வெற்றி பெறும் என்றும் VOTE VIBE கணித்துள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 39.9 சதவீதமும் திமுக கூட்டணி 38.9 சதவீதமும்  தவெக 15.8 சதவீதமும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.</p>
<p>அதேபோன்று, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி குறித்த கணிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கிராமப்புறங்களில்  ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 0 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்பு  உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p>
<p>தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது தொங்கு சட்டமன்றமாக அமையும் என்பதையே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>
<p>கருணாநிதி &#8211; ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>தமிழ்நாடு தேர்தல் அரசியலில் மக்கள் கூட்டம், சமூக ஊடகத் தாக்கம், நட்சத்திரக் கவர்ச்சி ஆகியவை வெற்றிக்கான ஒரே அளவுகோலாக இருக்க  முடியாது என்பதையும், அதேவேளை பாரம்பரியக் கணக்கீடுகள் புதிய அரசியல் அலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்பதையும் இந்த தேர்தல் நினைவூட்டுகிறது. விஜயின் தவெக உண்மையில் “அமைதியான அரசியல் எழுச்சியை உருவாக்கியுள்ளதா?” அல்லது “அது வெறும் பிரச்சார வெப்பமா? என்பது வாக்கு எண்ணிக்கையிலேயே தெளிவாகும்.</p>
<p>எதுவாக இருந்தாலும், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் இரு கட்சி ஆதிக்க அரசியலை சவாலுக்கு உட்படுத்தியத் தேர்தலாகவும், விஜயின் அரசியல்  வருகை கணிப்புகளையும் கணக்குகளையும் குழப்பிய தேர்தலாகவும் வரலாற்றில் பதிவாகும்.</p>
<p>மாற்றம் ஏற்படுமா? அல்லது “தற்போதைய ஆட்சி தொடருமா?“  என்ற இறுதி கேள்விக்கான பதில் மே 4 ஆம் திகதி தெரியவரும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/">தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</title>
		<link>https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 13:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49280</guid>

					<description><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன. பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார். அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.</p>
<p>அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.</p>
<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன.</p>
<p>பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார்.</p>
<p>அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்டு அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்ட 657 பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் திருப்பி அளிக்​கப்​பட்டுள்​ளன.</p>
<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28 ஆம் திகதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய தூதரக அதி​காரி ராஜலட்​சுமி கடாமிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் &#8211; இந்தியா கண்டனம்</title>
		<link>https://oruvan.com/india-condemns-nepal-airlines-for-mentioning-jammu-and-kashmir-in-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 12:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India condemns Nepal Airlines for mentioning Jammu and Kashmir in Pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49261</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் என கூறி  மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். நேற்று புதன்கிழமை தமது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, டுபாய், தோஹா, தம்மாம், பாங்காக், கோலாலம்பூர், நரிட்டா, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-condemns-nepal-airlines-for-mentioning-jammu-and-kashmir-in-pakistan/">ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் &#8211; இந்தியா கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் என கூறி  மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம்.</p>
<p>நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். நேற்று புதன்கிழமை தமது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, டுபாய், தோஹா, தம்மாம், பாங்காக், கோலாலம்பூர், நரிட்டா, ஹாங்காங், குவாங்சவ் உள்ளிட்ட நகரங்களுக்கு தங்களது விமான நிறுவன சேவை கிடைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
<p>இந்த பதிவுதான் சர்ச்சையாகி உள்ளது. அதில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி, பாகிஸ்தானின் பிரதேசத்தில் காட்டப்பட்டு இருந்தது. அது சமூக வலைதளத்தில் உடனடியாக வைரல் ஆனது.</p>
<p>வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம், சம்பந்தப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுளடளன.</p>
<p>மேலும்,  விமான நிறுவனத்தின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளன. இதையடுத்து அந்த பதிவை நீக்கியது நேபாள ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்.</p>
<p>“சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விமான நெட்வொர்க்கின் வரைபடத்தில் இருந்த பிழைக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அதில் சர்வதேச எல்லைகள் தொடர்பான விவரம் துல்லியமானதாக இல்லை. அதில் பிழைகள் இருந்ததாக நேபாள ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.</p>
<p>அண்டை நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வலுவான உறவுகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய இந்த வரைபட விவகாரம் நேபாளம் அல்லது நேபாள ஏர்லைன்ஸின் நிலைப்பாடு அல்ல. இந்தப் பதிவு ஏற்படுத்திய தாக்கத்துக்கு வருந்துகிறோம்” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தங்கள் விமான நிறுவன சேவையை விரிவு செய்ய உள்ளதாக நேபாள ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் வரைபட சர்ச்சை அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-condemns-nepal-airlines-for-mentioning-jammu-and-kashmir-in-pakistan/">ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் &#8211; இந்தியா கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது &#8211; விதிகளில் தளர்வு</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-concluded-relaxation-in-rules/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 06:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Election]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Election 2026]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49046</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை இராணுவம், பொலிஸார் இணைந்து மூன்று அடுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-concluded-relaxation-in-rules/">தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது &#8211; விதிகளில் தளர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன.</p>
<p>அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள்.</p>
<p>இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை இராணுவம், பொலிஸார் இணைந்து மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.</p>
<p>இதனால், சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேர்தலில் மொத்தம் நான்கு ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-concluded-relaxation-in-rules/">தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது &#8211; விதிகளில் தளர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் &#8211; வாக்குப்பதிவு நிறைவு ; 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-voting-complete-more-than-85-percent-votes-recorded/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 13:17:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48796</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள். தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-voting-complete-more-than-85-percent-votes-recorded/">தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் &#8211; வாக்குப்பதிவு நிறைவு ; 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது.</p>
<p>தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.</p>
<p>தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்தன.</p>
<p>அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்டிருந்தன.</p>
<p>இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் வைக்கப்பட்டிருந்தன.</p>
<p>பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை இராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.</p>
<p>மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் இராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.</p>
<p>இந்த தேர்தல் தமிழக வரலாற்றில் அதிகமாக வாக்குச் சதவீதம் பதிவான தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளது.</p>
<p>இம்முறை 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தமையே அதிக வாக்கு சதவீதமாக இருந்தது.</p>
<p>பிற்பகல் 5 மணி நிலவரப்படி 82 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தேர்தல் முடிவுகள் எதிர்வரும் மே 4ஆம் திகதி வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-voting-complete-more-than-85-percent-votes-recorded/">தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் &#8211; வாக்குப்பதிவு நிறைவு ; 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-82-24-voting-recorded-as-of-5-pm/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 12:14:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபை தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48786</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்ட ரீதியாக பதிவாக வாக்குச் சதவீதம் வருமாறு, சென்னை &#8211; 68.13% வாக்குகள் பதிவு. கோவை &#8211; 71.16% வாக்குகள் பதிவு. மதுரை -67.15% வாக்குகள் பதிவு. திருச்சி &#8211; 71.03% வாக்குகள் பதிவு. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-82-24-voting-recorded-as-of-5-pm/">தமிழக சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.</p>
<p>பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.</p>
<p>இந்த நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.</p>
<p>மாவட்ட ரீதியாக பதிவாக வாக்குச் சதவீதம் வருமாறு,</p>
<p>சென்னை &#8211; 68.13% வாக்குகள் பதிவு.</p>
<p>கோவை &#8211; 71.16% வாக்குகள் பதிவு.</p>
<p>மதுரை -67.15% வாக்குகள் பதிவு.</p>
<p>திருச்சி &#8211; 71.03% வாக்குகள் பதிவு.</p>
<p>அரியலூர் &#8211; 68.97% வாக்குகள் பதிவு.</p>
<p>செங்கல்பட்டு &#8211; 69.46% வாக்குகள் பதிவு.</p>
<p>கடலூர் &#8211; 68.53% வாக்குகள் பதிவு.</p>
<p>தருமபுரி &#8211; 74.68% வாக்குகள் பதிவு.</p>
<p>திண்டுக்கல் -74.35% வாக்குகள் பதிவு.</p>
<p>ஈரோடு &#8211; 75.61% வாக்குகள் பதிவு.</p>
<p>கள்ளக்குறிச்சி- 72.16% வாக்குகள் பதிவு.</p>
<p>காஞ்சிபுரம் &#8211; 72.51% வாக்குகள் பதிவு.</p>
<p>கன்னியாகுமரி &#8211; 61.84% வாக்குகள் பதிவு.</p>
<p>கரூர் &#8211; 60.77% வாக்குகள் பதிவு.</p>
<p>கிருஷ்ணகிரி -70.07% வாக்குகள் பதிவு.</p>
<p>மயிலாடுதுறை &#8211; 65.80% வாக்குகள் பதிவு.</p>
<p>நாகை &#8211; 69.96% வாக்குகள் பதிவு.</p>
<p>நாமக்கல் &#8211; 76.43% வாக்குகள் பதிவு.</p>
<p>பெரம்பலூர் &#8211; 70.54% வாக்குகள் பதிவு.</p>
<p>புதுக்கோட்டை &#8211; 69.85% வாக்குகள் பதிவு.</p>
<p>ராமநாதபுரம்- 63.14% வாக்குகள் பதிவு.</p>
<p>ராணிப்பேட்டை -72.46% வாக்குகள் பதிவு.</p>
<p>சேலம் &#8211; 75.80% வாக்குகள் பதிவு.</p>
<p>சிவகங்கை &#8211; 64.74% வாக்குகள் பதிவு.</p>
<p>தென்காசி- 67.54% வாக்குகள் பதிவு.</p>
<p>தஞ்சை &#8211; 66.65% வாக்குகள் பதிவு.</p>
<p>நீலகிரி- 63.67% வாக்குகள் பதிவு.</p>
<p>தேனி &#8211; 67.68% வாக்குகள் பதிவு.</p>
<p>திருவள்ளூர் &#8211; 68.07% வாக்குகள் பதிவு.</p>
<p>திருவாரூர் &#8211; 68.43% வாக்குகள் பதிவு.</p>
<p>தூத்துக்குடி- 65.18% வாக்குகள் பதிவு.</p>
<p>நெல்லை &#8211; 63.84% வாக்குகள் பதிவு</p>
<p>திருப்பத்தூர் &#8211; 71.46% வாக்குகள் பதிவு.</p>
<p>திருப்பூர் &#8211; 75.38% வாக்குகள் பதிவு.</p>
<p>திருவண்ணாமலை &#8211; 72.19% வாக்குகள் பதிவு.</p>
<p>வேலூர் &#8211; 71.23% வாக்குகள் பதிவு.</p>
<p>விழுப்புரம் &#8211; 71.65% வாக்குகள் பதிவு.</p>
<p>விருதுநகர் &#8211; 70.24% வாக்குகள் பதிவு.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-82-24-voting-recorded-as-of-5-pm/">தமிழக சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
