<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mano Shangar, Author at Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/author/mano/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/author/mano/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 15 Jun 2026 00:18:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Mano Shangar, Author at Oruvan.com</title>
	<link>https://oruvan.com/author/mano/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/</link>
					<comments>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 00:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trum]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49510</guid>

					<description><![CDATA[<p>போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/">ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.</p>
<p>உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதி செய்திருந்தார்.</p>
<p>இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் துல்லியமான நிபந்தனைகள் வெளியாகவில்லை.</p>
<p>எனினும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிவிப்பு வெளியானதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று காலை நேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் நான் வீதம் சரிந்த, அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 4.6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.</p>
<p>இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான நடவடிக்கைகளை எடுத்தால், அதன் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக நான்கு ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த நோக்கத்திற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாடின்றி திறக்கக் கோருவதோடு, லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/">ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</title>
		<link>https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 01:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[GFZ]]></category>
		<category><![CDATA[Philippines]]></category>
		<category><![CDATA[Tsunami warnings]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49497</guid>

					<description><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/">பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறும், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.</p>
<p>முன்னதாக, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டர் அளவில் இருக்கும் என ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டிருந்தது.</p>
<p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p>
<p>தெற்கு பிலிப்பைன்ஸின் சில மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம், அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.</p>
<p>அதேபோல், ஜப்பானும் தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/">பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/red-alert-for-eight-districts-due-to-heavy-rain/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 01:56:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka Weather]]></category>
		<category><![CDATA[Weather News Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49405</guid>

					<description><![CDATA[<p>கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம், குருநாகலை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று அதிகாலை நான்கு மணியுடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/red-alert-for-eight-districts-due-to-heavy-rain/">கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, புத்தளம், குருநாகலை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, இன்று அதிகாலை நான்கு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிரிந்திவெலையில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p>
<p>அங்கு 244 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p>
<p>காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.</p>
<p>வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p>
<p>ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p>
<p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.</p>
<p>இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, தற்போது நிலவிவரும் கனமழை காரணமாக, மூன்று மாவட்டங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p>
<p>இந்த அறிவிப்பு இன்று அதிகாலை 3.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிக்கு முதல் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/red-alert-for-eight-districts-due-to-heavy-rain/">கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</title>
		<link>https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 06:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Ryan Rickelton]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49244</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.</p>
<p>வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.</p>
<p>எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.</p>
<p>தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.</p>
<p>இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</title>
		<link>https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 05:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49240</guid>

					<description><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் 60 நாட்களுக்கு மேல் இராணுவ நடவடிக்கையைத் தொடர முடியாது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 60 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, டிரம்பிற்கு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என்றும், இது அவரை மூன்று சாத்தியமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/">ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.</p>
<p>அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் 60 நாட்களுக்கு மேல் இராணுவ நடவடிக்கையைத் தொடர முடியாது.</p>
<p>இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 60 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளது.</p>
<p>இதன்படி, டிரம்பிற்கு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என்றும், இது அவரை மூன்று சாத்தியமான வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கும் என்றும் தெரியவந்துள்ளது.</p>
<p>அந்த வகையில், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்துகொள்வதே முதல் வழியாகும், அதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.</p>
<p>அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி, கடல் முற்றுகையை நீக்கினால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் ஒரு நிபந்தனைக்குட்பட்ட சலுகையை முன்வைத்துள்ளது.</p>
<p>எனினும், இந்த சாத்தியக்கூறு பலவீனமானதாகக் கருதப்படுகிறது.</p>
<p>இரண்டாவது வழி, இராணுவ நடவடிக்கைக்கான அங்கீகாரத்தை காங்கிரஸிடம் கோருவதாகும், இதற்கு எளிய பெரும்பான்மை தேவை.</p>
<p>இந்த நிலையில், போரைத் தொடர முடியும் என்பதுடன் தரைவழி நடவடிக்கை உட்பட மேலதிக நடவடிக்கைகளும் சாத்தியமாகும். எனினும் இந்த சாத்தியக்கூறு நடுத்தரமானது என விவரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மூன்றாவது மற்றும் அதிக சாத்தியமான சூழ்நிலை என்னவென்றால், காலக்கெடு முடிந்த பிறகும் ஜனாதிபதி டிரம்ப் அதைப் புறக்கணித்துப் போரைத் தொடர்வதுதான்.</p>
<p>இது ஒருவித சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.</p>
<p>இந்நிலையில், டிரம்ப் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அரசியல் அல்லது சட்டரீதியான அபாயங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் எந்த வழியும் தெளிவான வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p><strong>அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் ஏன் முடங்கியுள்ளது?</strong></p>
<p>பல முக்கிய அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சாத்தியமான ஒப்பந்தம் இன்னும் முடங்கியுள்ளது.</p>
<p>அதேவேளையில், இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ளது.</p>
<p>அறிக்கைகளின்படி, போர் நிறுத்தத்திற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் எந்தவொரு பெரிய சலுகைகளையும் வழங்காததால், அந்நாடு முன்வைத்த சமீபத்திய முன்மொழிவுகளுக்கு டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.</p>
<p><strong><em>ஈரானின் அணுசக்தித் திட்டம்</em></strong></p>
<p>முக்கியமான சர்ச்சைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகும்.</p>
<p>இதில், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.</p>
<p>ஆனால் அத்தகையத் தடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று ஈரான் வாதிடுகிறது.</p>
<p><strong><em>யுரேனியம் படிவுகள்</em></strong></p>
<p>யுரேனிய இருப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். ஈரானிடம் உள்ள சுமார் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட</p>
<p>யுரேனியத்தின் மீது அமெரிக்கா முழுமையானக் கட்டுப்பாட்டைக் கோருகிறது, ஆனால் ஈரான் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.</p>
<p><strong><em>ஹார்முஸ் நீரிணை</em></strong></p>
<p>மறுபுறம், ஹார்முஸ் நீரிணையும் பதற்றத்தின் மையமாகக் காணப்படுகின்றது. அங்கு, அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்கினால் மட்டுமே தடைகளை நீக்க முடியும் என்ற நிபந்தனையுடன் ஈரான் தடைகளைத் தொடர்ந்து விதித்துள்ளது.</p>
<p>அதேவேளையில், ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p>
<p><strong><em>முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல்</em></strong></p>
<p>இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக, பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும், சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்டச் சொத்துக்களைத் திருப்பித் தருமாறும் ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p><strong><em>சேதங்களுக்கான இழப்பீடு</em></strong></p>
<p>மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஈரான் ஏறத்தாழ 279 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளது.</p>
<p>இது பேச்சுவார்த்தைகளில் மற்றொரு பெரும் தடையாக அமைந்துள்ளது.</p>
<p><strong><em>ஈரானின் பிராந்திய செல்வாக்கு</em></strong></p>
<p>பிராந்திய செல்வாக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.</p>
<p>லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட தனது கூட்டாளிகளுக்கான ஆதரவை ஈரான் குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புகையில், ஈரான் இந்த நிலைப்பாட்டை மறுத்துள்ளது.</p>
<p>நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்காமல் ஒரு விரிவான உடன்பாட்டை எட்டுவது தற்போது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/">ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனா எம்.பிக்கு பிணை</title>
		<link>https://oruvan.com/bail-granted-to-archchuna-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 06:44:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bail]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49221</guid>

					<description><![CDATA[<p>கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bail-granted-to-archchuna-mp/">அர்ச்சுனா எம்.பிக்கு பிணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.</p>
<p>அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.</p>
<p>பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.</p>
<p>வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.</p>
<p>அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.</p>
<p>அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.</p>
<p>அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.</p>
<p>அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.</p>
<p>The post <a href="https://oruvan.com/bail-granted-to-archchuna-mp/">அர்ச்சுனா எம்.பிக்கு பிணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி</title>
		<link>https://oruvan.com/archchuna-mp-brought-to-court-in-handcuffs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 04:41:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<category><![CDATA[அர்ச்சுனா எம்.பி]]></category>
		<category><![CDATA[இராமநாதன் அர்ச்சுனா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49203</guid>

					<description><![CDATA[<p>கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/archchuna-mp-brought-to-court-in-handcuffs/">கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.</p>
<p>கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார்.</p>
<p>இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>குறித்த காணி உரிமை தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதில், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், ஒரு பெண்ணும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுானா கைத்துப்பாக்கியை காட்டி இந்த மிரட்டலை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/archchuna-mp-brought-to-court-in-handcuffs/">கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 04:07:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[gazette]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49200</guid>

					<description><![CDATA[<p>டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவால் 2026ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பின் மூலம் முறைப்படுத்தப்பட்டது. இந்த வர்த்தமானியின்படி,, சமூக வாழ்க்கைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/">அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவால் 2026ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.</p>
<p>இந்த வர்த்தமானியின்படி,, சமூக வாழ்க்கைக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறு அபாயத்தையும் கருத்தில் கொண்டு, பொது நிறுவனங்கள், அரச துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் வழங்கும் சேவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.</p>
<p>அத்தியாவசிய சேவைகளில் மின்சார வழங்கல், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் சாலைகள், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு ஆகியவையும் அடங்கும்.</p>
<p>மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகால், உணவு விநியோகம், வேளாண்மை சார்ந்த சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவையும் அத்தியாவசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்த உத்தரவானது, ஆம்புலன்ஸ் சேவைகள், அரச வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், மேலும் கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர்கள் போன்ற களநிலை அலுவலர்கள் உட்பட, மாவட்ட மற்றும் கோட்டச் செயலகங்களால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நிர்வாகப் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.</p>
<p>கழிவு மேலாண்மை, தீயணைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் போன்ற உள்ளாட்சி அமைப்பு சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.</p>
<p>டித்வா புயலைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதையும், நாட்டில் இயல்பு நிலையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/">அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 12:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[KKR]]></category>
		<category><![CDATA[Kolkata Knight Riders]]></category>
		<category><![CDATA[Shreyas Iyer]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49068</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/">ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.</p>
<p>இதனைடுத்த 2025ம் ஆண்டு இடம்பெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<br />
தற்போது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்த அணியின் தலைவராக இருந்தபோது, ​​சந்திரகாந்த் பண்டிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.</p>
<p>இந்நிலையிலேயே, ஐயரை விடுவிக்க கொல்கத்தா நிர்வாகம் ஏன் முடிவு செய்தது என்பதை பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>&#8220;துரதிர்ஷ்டவசமாக, எங்களால் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஒரு அற்புதமான வீரர், அவர் தலைவராக எங்களுக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.</p>
<p>அவர் அணியைக் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.</p>
<p>ஆனால் சில சமயங்களில், சில சூழ்நிலைகள் எழுகின்றன மற்றும் எதிர்காலத் திட்டங்கள் அத்தகைய வீரர்களைக் கைவிட உங்களைக் கட்டாயப்படுத்தும் என சந்திரகாந்த் பண்டிட் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/">ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை &#8211; லெபனான் அமைச்சர்</title>
		<link>https://oruvan.com/there-is-no-shame-in-negotiating-with-israel-lebanese-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 08:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Lebanon]]></category>
		<category><![CDATA[Youssef Raggi]]></category>
		<category><![CDATA[லெபனான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49053</guid>

					<description><![CDATA[<p>போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நிலப்பரப்பை மீட்பதும் இலக்காக இருந்தால், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவமானம் ஏதுமில்லை என்று லெபனானின் வெளியுறவு அமைச்சர் யூசெஃப் ராகி தெரிவித்துள்ளார். இந்நிலையில், லெபனான் யாருக்கும் அடிபணியவில்லை, எந்தவொரு அச்சு அணியின் கையில் உள்ள துருப்புச்சீட்டும் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். லெபனானின் பேச்சுவார்த்தைக்கான முடிவு, சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல சரணடைதல் அல்ல, மாறாக அது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-shame-in-negotiating-with-israel-lebanese-minister/">இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை &#8211; லெபனான் அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நிலப்பரப்பை மீட்பதும் இலக்காக இருந்தால், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவமானம் ஏதுமில்லை என்று லெபனானின் வெளியுறவு அமைச்சர் யூசெஃப் ராகி தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், லெபனான் யாருக்கும் அடிபணியவில்லை, எந்தவொரு அச்சு அணியின் கையில் உள்ள துருப்புச்சீட்டும் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>லண்டன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>லெபனானின் பேச்சுவார்த்தைக்கான முடிவு, சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல சரணடைதல் அல்ல, மாறாக அது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவி என்று யூசெஃப் ராகி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இஸ்ரேலுடன் கையாள்வதில் லெபனான் பலவீனமாக இருப்பதாகச் சித்தரிப்பவர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.</p>
<p>லெபனானை முற்றிலும் பலவீனமான நிலையில் சித்தரிப்பது ஒரு பெரும் தவறு, அதேபோல சரணடையும் நிலையில் இருப்பதாகச் சித்தரிப்பதும் தவறானதே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஹிஸ்புல்லா மீதும் ராகி தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.</p>
<p>மேலும், அமைச்சர் லெபனானுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை வகுத்து, லெபனானின் வழிமுறை இப்போது ஈரானிய வழிமுறையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது என்றும், லெபனானின் நலன்கள் இனி ஈரானிய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கோ அல்லது முட்டுக்கட்டைக்கோ பணயக்கைதிகளாக இல்லை என்றும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-shame-in-negotiating-with-israel-lebanese-minister/">இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை &#8211; லெபனான் அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
